வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று மதியம் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
அவர்களது போராட்ட களத்தில் மதியம் இடம்பெற்ற இப்போராட்டத்தில் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும் அமெரிக்காவே சிங்கள ,பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை, எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும் , தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா? போன்ற வாசகங்களைத் தாங்கியவாறும் கதறி அழுது, கண்ணீர்விட்டு தமது போராட்டத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கப்படகோரியும் கடந்த 884 நாட்களாக தமது தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.